பின் அங்கிருந்து கருவூர்த் தேவர் ஒரு விஷ்ணு ஆலயத்தை அடைந்து அங்கு உறையும் பெருமானை அழைத்தார். அவர் வராததால் அக்கோயில் பூசையற்றுப் போகுமாறு சபித்தார். பின் திருக்குற்றாலத்திற்கு வந்து இறைவனின் தரிசனம் பெற்றுத் திருவிசைப்பா பாடியருளினார். திருக்குற்றாலத்தில் இருந்து பொதிகை மலைக்குக் கருவூர்த் தேவர் எழுந்தருளினார். இவர் அங்கு இருக்கும்போது நெல்லையப்பர் சந்நிதியில் நின்று அது நிவேதன காலம் என அறியாது நெல்லையப்பா என மும்முறை அழைத்தார். பதில் ஏதும் பெறாமையால் கடவுள் அங்கு இல்லை என உரைத்து அங்கிருந்து நீங்கிச் சென்றார். உடனே அந்த ஆலயத்தினுள் எருக்கு முதலானவை முளைத்தன. இதனால் நெல்லையப்பர் மானூரில் கருவூர்த் தேவருக்குத் தரிசனம் தந்து அடிக்கொரு பொன் கொடுத்துத் திருநெல்வேலி ஆலயத்துக்கு அழைத்து வந்து திருக்காட்சி நல்கினார். அப்போது அங்கு முளைத்து மண்டியிருந்த எருக்கு முதலான தகாத பூண்டுகள் சட்டென மறைந்தொழிந்தன.

இவரைக் கண்ட மானூர் வேதியர்கள், இவர் அநாசாரமுள்ளவர், என்றனர். இதனால் கோபம் கொண்ட கருவூர்த் தேவர் மானூரில் வீடில்லாது போகுமாறு சாபமிட்டார். இவர் அங்கு தங்கியிருந்த போது தஞ்சை மன்னர் செய்த சிவப்பிரதிஷ்டையில் அஷ்டபந்தனம் பலமுறை இளகிப் பந்தனமாகாமல் போனது. இதனால் அரசன் மிகவும் மனம் வருந்தினான். அப்போது கருவூர்த் தேவர் வந்தால் பந்தனமாம் என்று அசரீரி ஒலித்தது. இதனைத் தன் உருவை மறைத்து அங்கு வந்திருந்த போகர் காக்கை ஒன்றின் கழுத்தில் ஓலை ஒன்றை வரைந்து அனுப்பிக் கருவூர்த் தேவரை வரவழைத்தார். அங்கிருந்தோர் தேவரிடம் நடந்தவற்றைக் கூறி வேண்ட, தேவரும் சம்மதித்துக் கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அஷ்டபந்தனம் செய்து வைத்தார்.
தஞ்சையிலிருந்து திருவரங்கத்திற்குத் தேவர் சென்றார். அப்போது அங்கு இருந்த தாசி ஒருத்தி தேவரின் தேகப் பொலிவைக் கண்டு தன் கருத்தைத் தெரிவிக்க, அதற்கு இசைந்து அவளுடன் இரண்டு நாட்களுக்குத் தேவர் தங்கினார். பின் அங்கிருந்து நீங்கிப் பெருமாளைத் தரிசித்தார். அவர் தந்தருளிய பதக்கத்தைத் தான் தங்கியிந்த தாசியிடம் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது தாசி பிரிவாற்றாமையால் வருந்தவே, தேவர் அவளிடம், நீ எப்போது என்னை நினைத்தாலும் வருவேன் என்றுரைத்துவிட்டுத் தன் யாத்திரையை தொடர்ந்தார்.
தேவர் தமக்கு அளித்த பதக்கத்தை அணிந்துகொண்டு தாசி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அப்போது கோயில் தானிகர் அவளிடம் இருந்த பதக்கத்தைக் கண்டு, இது உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று வினவ, தாசி அப்பதக்கம் தனக்கு வேதியர் ஒருவரால் அளிக்கப்பட்டது என்றால். உடனே கோயில் அதிகாரிகள் தாசியின் வீட்டைக் காவலிட்டனர். இதனால் மனம் வருந்திய தாசி தேவரை நினைக்க, தேவரும் உடனே அவ்விடத்தில் தோன்றினார்.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்