கருவூரார் என்ற இச்சித்தரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்கே இருந்த திருக் கோயில்களிலிருக்கும் பஞ்சலோகச் சிலைகளைச் செப்பனிட்டுக் கொடுத்தும் அல்லது புதுச்சிலைகளை வார்த்துக் கொடுத்தும் தொழில் செய்து தம் பிழைப்பை நடத்தி வந்தனர் என்று அகத்திய முனிவர் தம் பன்னிரெண்டாயிரம் என்ற பெருநூல் காவியம் நான்காவது காண்டம் 452 ஆவது பாடலில் கூறியுள்ளார்.

துணிந்துமே சிலைக்கருவு செய்ய வென்று
துப்புரவாய்க் குடிகளிட மார்க்கம் சென்று
மணியான மணியுடனே குடவன் தானும்
மன்னவனே நவலோகம் ஒன்றாய்ச் சேர்த்து
அணியான கருவுதனில் அமைத்துமே தான்
அப்பனே பிரதமைகள் உருவு செய்து
தணியான கருவுதனை விற்று உண்டு
சதா காலம் சீவனங்கள் செய்திட்டாரே
இட்டாரே கருவூரார் தந்தை தாய்மார்
எழில் பெரிய தேவதாஸ்தானங்கள் தேடி…..
என்று அகத்தியர் விளக்குகிறார். பிற நூல்களிலும் கருவூரார், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களைக் கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றே கூறப்பட்டுள்ளது. இவர் தம் மாணாக்கர் என்று போக முனிவரே தம் நூல்கள் பலவற்றில் கூறியுள்ளார்.
ஆனால், சிலர் கருவூர்த் தேவர் என்றழைக்கப்பட்ட சிவனடியாரின் வரலாற்றை இவர் மேலேற்றிக் கதைகள் புனைந்து கூறியதும் உண்டு. சரியாக ஆராய்ந்து அறியாத ஒரு சிலர் கருவூரார் என்றழைக்கப்பட்ட சித்தர் பிராமணர் குலத்தவர் என்று உரைக்கின்றனர். இவ்விருவருக்கும் உள்ள வேறுப்பாட்டை பலர் அறியவில்லை. அபிதான சிந்தாமணியில் கருவூர்த் தேவர் பற்றிக் கூறப்பட்டுள்ளதாவது….

கருவூரில் பிராமண குலத்தவராய்ப் பிறந்து, மெய்ஞ்ஞான நூலாய்ந்து சைவ சமய்த்தைக் கடைப்பிடித்துச் சிவயோக சித்தியை அடைந்து சாதி குலம் நீத்துச் சிவத்தல யாத்திரை செய்து திருவிசைப்பதிகம் பாடி வந்தார்.
பல தலங்களுக்குச் சென்று வந்த இவர் கஜமோட்சம் என்ற தலத்தை அடைந்து, அங்கிருந்த முன்றீசரை அழைக்க அப்பெருமானும் தரிசனம் தந்தருளி, என்ன வேண்டும் என்று வினவினார். கருவூர்தேவர் தமக்குக் கள் வேண்டும் என்று கேட்டார். உடனே முன்றீசர் காளிக்குக் கட்டளையிட, காளியும் தேவருக்கு மதுக்குடத்தை அளித்தாள். மேலும் தமக்கு மீன் வேண்டும் என்று தேவர் காளியிடம் கேட்டார். உடனே கோட்டவாசிகளிடம் காளி மீனைக் கேட்க அவர்கள் ஆறு, கடல் என்று எங்கு தேடியும் மீன் அகப்படாமை கண்டு கருவூர்த் தேவர் அங்கே இருந்த வன்னிமரத்தை உற்று நோக்கினார். உடனே அந்த வன்னிமரம் மீன் மாரிப் பொழிந்தது.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்