தோணாம லிராவணன் சிறையெடுத்த
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே. — இராமதேவர் (யாகோபு)
பொன்னாங் கன்னியை பிடுங்கிக் கொண்டு வந்து கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து மண்பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து தலைக்கு முழுக கண்களுக்கு ஒளி உண்டாகும்.
திலகம் – எள்ளு